தமிழக செய்திகள்

15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

துத்திக்காடு, பாலம்பாக்கம் பகுதிகளில் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் சரிபார்ப்பு.

தினத்தந்தி

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வாடகை மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் 15 பேருக்கு துத்திக்காடு, பாலம்பாக்கம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில் வீட்டுமனைபட்டா வழங்கப்பட உள்ள இடத்தை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், அந்த இடம் நீர்நிலை மற்றும் சாலையோர அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளதா என்று அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அரசு அனுமதி வழங்கியவுடன் இலவச வீட்டுமனை பட்டாவை உடனடியாக 15 பேருக்கும் வழங்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை