தமிழக செய்திகள்

தொழிலாளியை தாக்கிய நண்பர் கைது

பழனி அருகே தொழிலாளியை தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பழனி அருகே உள்ள செம்மாட்டுபாறை பகுதியில் நேற்று முன்தினம், 20 வயது உடைய வாலிபர் ஒருவர் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விசாரணையில், காயமடைந்தவர் பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான விஷ்வா (வயது 20) என்பது தெரியவந்தது.

இவர், 1-ந் தேதி இரவு தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த முத்துராஜாவுடன் (25) செம்மாட்டுபாறை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துராஜா கல்லால் விஷ்வாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்