தமிழக செய்திகள்

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பாதிப்பில் மேலும் 29 பேர் உயிரிழப்பு என தகவல்

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவிற்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 70,017 ஆக உள்ளது. 1,083 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேர் மற்றும் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு