தமிழக செய்திகள்

வைக்கோல் போருக்கு தீவைப்பு

ராமநத்தம் அருகே வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

தினத்தந்தி

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே அரங்கூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). இவர் அங்குள்ள ராமநத்தம்-விருத்தாசலம் சாலையோரமாக வைக்கோல் போர் வைத்திருந்தார். இந்த வைக்கோல் போர் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் சுமார் 100 வைக்கோல் கட்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முதல் கட்ட விசாரணையில் வைக்கோல் போருக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்து எரித்தது என தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்