தமிழக செய்திகள்

காந்தி ஜெயந்தி: அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ந் தேதி கிராமசபை கூட்டம்

கூட்டம் நடைபெறும் இடம் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காந்தி ஜெயந்தியான அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். இதில் கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப்பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். கிராமசபையின் ஒப்புதலுடன் பிற முக்கிய பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறையாக பதிவு செய்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT