தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் கங்கா பூர்வாலா

புதிய தலைமை நீதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின்பு, தலைமை நீதிபதி பணியிடத்துக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அதேவேளையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார்.

அவர் ஓய்வுபெற்றதை தொடர்ந்து மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 24-ந்தேதி ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

புதிய தலைமை நீதிபதி அவர் நேற்று முன்தினம் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துவரும் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் கங்கா பூர்வாலாநாளை பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை காலை 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் மராட்டிய மாநிலத்தில் பிறந்த நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார். 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்துவருகிறார்.

அடுத்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி இவர் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்