தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி

திருச்சி வாளவந்தான்கோட்டை பழைய பர்மா காலனி அசோகர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). கடந்த மாதம் 15-ந்தேதி 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் சரவணனை திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் துவாக்குடி போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள சரவணன் தொடர்ந்து கஞ்சா விற்றுவந்ததாலும், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில், சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்