தமிழக செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

செய்துங்கநல்லூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் நேற்று செய்துங்கநல்லூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் அங்கு வந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் செய்துங்கநல்லூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து