தமிழக செய்திகள்

பிறந்த 3 வாரங்களில் பெண் குழந்தை சாவு

அரூர் அருகே பிறந்த 3 வாரங்களில் பெண் குழந்தை இறந்தது.

தினத்தந்தி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். அவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு 3-வது பெண் குழந்தை பிறந்தது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை சித்தேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது. இதுதொடர்பாக சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் இறப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்