தமிழக செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மனைவி பிரேமா (வயது 23). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேமாவுக்கு இரட்டை குழந்தை பிறந்து உள்ளது. அதன்பிறகு பிரேமா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பிரேமா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேமாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால், உதவி கலெக்டர் கவுரவ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்