கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

இட்லி சாப்பிட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு பிரனிதா (11 வயது), டிக்சிதா (9 வயது), டில்சிதா (7 வயது) என 3 மகள்கள் உண்டு.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி காலையில் வனிதா மகள்களுடன் வீட்டில் சமைத்த வேர்க்கடலை சட்னியுடன், இட்லி சாப்பிட்டுள்ளார். அன்றிரவு வனிதா மற்றும் 3 மகள்களுக்கும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மறுநாள் 24-ந்தேதி பிரம்மதேசம் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

பின்னர் அன்று மாலையில் பிரனிதா, டிக்சிதா இருவரும் மயக்கம் அடைந்ததால் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். தொடர்ந்து 26-ந்தேதி பிரனிதாவை மட்டும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து