தமிழக செய்திகள்

வடலூர் ஏரியில் மூழ்கி சிறுமி பலி

வடலூர் ஏரியில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

வடலூர், 

புவனகிரி அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவர் சம்பவத்தன்று தனது மனைவி பிரியா, மகள்கள் கவுசல்யா (வயது 9), கவுசிகா (7) ஆகியோருடன் வடலூர் ஞானசபைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 4 பேரும் வள்ளலாரை தரிசனம் செய்து விட்டு தர்மச்சாலையில் மதிய உணவு சாப்பிட்டனர். அதன்பிறகு 4 பேரும் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, ஞானசபை அருகே உள்ள காரப்ப ஏரிக்கு சென்று குளித்தனர். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற கவுசிகா நீரில் மூழ்கினாள். இதைபார்த்து பதறிய பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவுசிகாவை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கவுசிகா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோருடன் குளிக்க சென்ற சிறுமி ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்