தமிழக செய்திகள்

விஷம் குடித்து சிறுமி தற்கொலை

விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

நன்னிலம் அருகே உள்ள மணியாங்குடி கிராமத்தை சேர்ந்த சுதாகர் மகள் சத்தியவந்தினி (வயது15). இவர் நன்னிலம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் பக்கத்து வீட்டிற்கு சென்று, மருதாணி பறித்து விட்டு கால தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு