தமிழக செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம்

நாச்சியார்கோவில் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருவிடைமருதூர்;

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒரு ஆட்டை காணவில்லை என்று தேடி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வடகரை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் சதீஷ் (வயது30) சிறுமியின் ஆடையை பிடித்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி சத்தம் எழுப்பினார். அப்போது அங்கு வந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியை மீட்டு நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சதீசை கைது செய்தனர்

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்