தமிழக செய்திகள்

‘பெண் குழந்தைகள் தற்காப்பு கலை பயில வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பெண் குழந்தைகளின் பெற்றோர் எல்லாம் பயத்திலேயே இருக்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற தனியார் தற்காப்பு கலை நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில், தற்காப்பு கலையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அன்புமணி ராமதாஸ் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு கவுரவ பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

குழந்தைகள் அனைவரும், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும். இன்று நாட்டில் நிலவும் சூழலை நீங்கள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். பெண் குழந்தைகளை படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பும் பெற்றோர் எல்லாம் பயத்திலேயே இருக்கிறார்கள். எனவே பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை பயில வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்