தமிழக செய்திகள்

பிளஸ்-2 மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளி அளவில் தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பிளஸ்-2 மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளி அளவில் தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், தமிழக அரசு 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி, மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளித்தது.சுகாதாரத்துறை செயலாளர் தமிழ்நாட்டில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

பொதுத் தேர்வு என்பதால் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தினந்தோறும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக பெற்றோர் கவலையோடு தெரிவிக்கின்றனர். எனவே பெற்றோரின் அச்சத்தை போக்கவும், மாணவர்களின் நலன் கருதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கி இந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வினை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகளை நடத்த பரிசீலிக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது