தஞ்சாவூர்,
கல்லணையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், இன்று காலை கல்லணையை வந்தடைந்தது.
மேட்டூர் அணையை கடந்த 1-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து இன்று கல்லணையை அடைந்தது.
இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.