தமிழக செய்திகள்

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. அரசு பஸ் டிரைவரான இவருக்கும் ஒரங்கூரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக ராஜா வைத்தியநாதபுரத்தில் உள்ள தனது வயலில் உள்ள பம்பு செட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்து வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் ராஜா மீது போக்சே வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்