சென்னை,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அந்த கடிதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மதரீதியான பாகுபாட்டுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 40-வது பத்தியில் இடம்பெற்றுள்ள புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் குறித்த தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஜி 20 நாடுகளின் மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019 மதரீதியான பாகுபாட்டுடன் இருக்கும் நிலையில், இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகள் 2020 ஆம் அண்டு இந்தோனேசியாவில் நிறைவேற்றிய தீர்மானங்களில் அகதிகள் & புலம்பெயர்ந்தோர்
(1/1) pic.twitter.com/SbzlmiqrPZ
Thol. Thirumavalavan (@thirumaofficial) December 22, 2022 ">Also Read: