தமிழக செய்திகள்

மாணவிகள் விடுதியில் அரசு மானியத்தில் தோட்டம்

விழுப்புரம் மாணவிகள் விடுதியில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்க கோலியனூர் ஒன்றியத்தில் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவிகள் விடுதியில் 10 செண்ட் இடத்தில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்கப்பட்டது. அதில் கல்லூரி மாணவிகள், விடுதி காலியிடத்தில் உழவு செய்து நாற்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் செந்தில் தலைமை தாங்கினார். கோலியனூர் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேசன், அரசு மானியத்துடன் கூடிய தோட்டம் அமைப்பதை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி விடுதி காப்பாளர் பெமினா செல்வி, உதவி பேராசிரியர்கள் ஞானமூர்த்தி, ரீகன் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டு மூலிகை செடிகள், தோட்டப்பயிர்களுக்கான விதைகளை நட்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்