கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு - தமிழக அரசு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என்று தெரிவிக்கப்பட்டது.

ரம்மியை நேரில் விளையாடும்போது தான் திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைனில் விளையாடுவோரின் சுய அறிவிப்பு (Profile) எப்படி சரிபார்க்கப்படுகிறது என்று விளக்கப்படவில்லை என்று தமிழக அரசு வாதிட்டது.

மேலும், ஆன்லைன் விளையாட்டில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. ஒரு பகுதி ஆன்லைன் நிறுவனத்துக்கு செல்கிறது. நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும் என்று கூறியது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகள் ஆகஸ்ட் 14-ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்