தமிழக செய்திகள்

யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு

தேசத்திற்கான சேவையில் மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ்பவனில் இன்று நடைபெற்ற விழாவில், யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2023 மற்றும் இந்திய வனப்பணிகள் தேர்வு 2023 ஆகியவற்றில் தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்றவர்களை பாராட்டினார்.

வெற்றியாளர்களுடனான தனது உரையாடலின் போது, தேசத்திற்கான அவர்களின் சேவையில் மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு கவர்னர் ரவி அறிவுறுத்தினார். ஆளுமையின் அம்சங்களான உடல், அறிவாற்றல் மற்றும் ஆன்மிக உணர்வை நன்கு பேணுமாறும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் நன்றியுணர்வு மற்றும் பரிவுடனும் விளங்கி முன்மாதிரியாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு