தமிழக செய்திகள்

7 பேர் விவகாரத்தில் அமைச்சரவை முடிவை ஆளுனர் நிறைவேற்றி இருக்க வேண்டும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

7 பேர் விவகாரத்தில் அமைச்சரவை முடிவை ஆளுனர் நிறைவேற்றி இருக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வேலூர்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னரின் பதிலை, சுப்ரீம்கோர்ட்டில் மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், முடிவு எடுக்க ஜனாதிபதியே முழு அதிகாரம் படைத்தவர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுனர் நிறைவேற்றி இருக்க வேண்டும் என்றும், ஆனால் நாடகம் ஆடுகிறார்கள் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரிடத்தில் மறைத்து பேசுவது, ஆளுனருக்கு ஏற்புடையது அல்ல என்றார். மேலும் இந்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மெளனம் காட்டி மோசடி செய்யக்கூடாது என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு