தமிழக செய்திகள்

வாகனம் மோதி மூதாட்டி பலி

தூசி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

தினத்தந்தி

தூசி

வெம்பாக்கம் தாலுகா சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலித்தொழிலாளி. இவரின் தாயார் நாகம்மாள் (வயது 80). இவர் நேற்று மருத்துவமனைக்கு சென்று வருவதாக மகனிடம் சொல்லி விட்டு வெளியே சென்றார்.

ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை.

இந்தநிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ராஜேந்திரனுக்கு போன் செய்து உனது தாயார் நாகம்மாள் தூசி அருகே ஆக்கூர் கூட்டுச்சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடப்பதாக கூறினார்.

இதையடுத்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நாகம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்