இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தாசில்தார் அருண்குமார் தலைமை தாங்கி பழங்குடியினரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் புதிய ரேஷன்கார்டு, ஜாதி சான்றிதழ் உள்பட பல கோரிக்கைகளை வைத்து வழங்கப்பட்டன. இந்த முகாமில் துணை தாசில்தார் சுந்தரவேல், வருவாய் ஆய்வாளர் கணேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.