தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு சீல்

புகையிலை பொருட்களை விற்ற மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தினத்தந்தி

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்திற்குட்பட்ட வடக்கு மாதவி ரோட்டில் உள்ள சமத்துவபுரத்தில் லதா என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது பெரம்பலூர் போலீசாரால் கடந்த 14-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறையின் கூடுதல் ஆணையரின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வழிக்காட்டுதலின் பேரில், பெரம்பலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அந்த மளிகை கடையின் உணவு பாதுகாப்பு பதிவு எண்ணை ரத்து செய்து, கடையை பூட்டி சீல் வைத்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு