தமிழக செய்திகள்

புதுமாப்பிள்ளை தற்கொலை

திண்டுக்கல் அருகே விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரிட்டோ ஜியோபிரி (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். அவருடைய மனைவி செலன்பிரபா (26). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. பிரிட்டோ ஜியோபிரி, கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரிட்டோ ஜியோபிரி நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை