தமிழக செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - அதிகாரிகள் தகவல்

ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று ஜி.எஸ்.டி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, படிவம்-9 பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை, வரவு, செலவு உள்ள அனைத்து வணிகர்களும், படிவம்-9 தாக்கல் செய்ய வேண்டும். ரூ.2 கோடிக்கு மேல் வரவு, செலவு உள்ள நிறுவனங்கள், படிவம் 9-சி தாக்கல் செய்ய வேண்டும். 2020-21-ம் நிதியாண்டுக்கான, படிவம் 9 மற்றும் 9-சி தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்தது.

இந்த அவகாசத்தை, நடப்பாண்டு பிப்ரவரி 28-ந்தேதி அதாவது இன்று (திங்கட்கிழமை) வரை நீட்டித்து, மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்திருந்தது. இந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை, கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்கள், உடனடியாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு