தமிழக செய்திகள்

குன்றத்தூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலி

குன்றத்தூர் அருகே வாகனம் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

பம்மல், எல்.ஐ.சி.காலனி 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அரிகரன் (வயது51), இவர் திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

திருமுடிவாக்கம் - திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கனரக வாகனம் ஒன்று அரிகரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அரிகரன் அதே இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரிகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்