தமிழக செய்திகள்

நொய்யல் பகுதியில் குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை

நொய்யல் பகுதியில் குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.

தினத்தந்தி

நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் பயிர் செய்துள்ளனர். பின்னர்பூக்களை விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பூ வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ ரூ.1500-க்கும், காக்கட்டையான் பூ ரூ.900 க்கும், பச்சை முல்லை ரூ.1,500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் விற்பனையானது. கடும் பனிப்பொழிவாலும், பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு