தமிழக செய்திகள்

குட்கா வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அனுமதி - தமிழக அரசு அதிரடி..!

குட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

குட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முறைகேடாக விநியோகித்தது, விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இதற்கு தமிழக அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து குட்கா வழக்கில் சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்