தமிழக செய்திகள்

43 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு

பூச்சி அத்திப்பேடு பஜார் வீதி கடையில் 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட் கள் விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் நேற்று மாலை பூச்சி அத்திப்பேடு பஜார் வீதியில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களான ஜேக்கப் ஆபிரகாம் (வயது 27), பிரதாப் என்ற பிரதாப் சிங் ஆகிய 2 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்