தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விரிஞ்சிபுரம் அருகே உள்ள இந்திராநகர் நேருவீதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 34). சாலை அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகன்கள். இதில் 2-வது மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் கணேஷ்குமார் மனவருத்தத்தில் இருந்து வந்தார். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.

சம்பவத்தன்று அவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...