கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக குமரி, நெல்லையில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக குமரி, நெல்லையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெப்பச் சலனம் காரணமாக இன்று (மே 27) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

நாளை மே 28ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

மே 29, 30 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

மே 31ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், கன்னியாகுமரி மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மைலாடி (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 9 தலா, சுருளகோடு (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி (கன்னியாகுமரி) 6 தலா, நாகர்கோயில் (கன்னியாகுமரி), சித்தார் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) 5 தலா, பாபநாசம் (திருநெல்வேலி), பெரியார் (தேனீ), சின்னக்கல்லார் (கோவை), தென்காசி, கன்னியாகுமரி 4 தலா, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனீ), திருப்பதிசாரம் (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்றும் நாளையும் கேரளா, இலட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கிழக்கு இலங்கை கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) நாளை (மே 28) இரவு 11.30 வரை கடல் அலை 3.5 முதல் 4.0 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் மேலே குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது