தமிழக செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவினால் வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவினால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

தினத்தந்தி

கடும் பனிப்பொழிவு

கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த பனிப்பொழிவு மறுநாள் காலை 10 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் சாலைகளே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சீரான வேகத்தில் செல்லும் நிலை உள்ளது..

வாகன ஓட்டிகள் அவதி

முக்கிய சாலையான சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் தினமும் காலை வேளையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மிகவும் பனிமூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்வதை காண முடிகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிப்பொழிவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் நடைபயிற்சிக்கு செல்வோரின் கூட்டம் சற்று குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் சிலர் கடும் குளிரை தாக்குப்பிடிக்கும் வகையில் சாலையோரங்களில் நெருப்பு மூட்டி அதன் மூலம் சற்று குளிர்காய்ந்து வருவதையும் காண முடிகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து