தமிழக செய்திகள்

2-ம் நிலை போலீஸ்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்

2-ம் நிலை போலீஸ்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2-ம் நிலை போலீஸ்காரர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது குறித்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இயங்கிவரும் உதவி மையத்தை நேரில் அணுகியோ அல்லது 7305984100 என்ற செல்போன் எண்ணையோ தொடர்பு கொண்டோ விளக்கம் பெறலாம். இந்த உதவி மையம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்