தமிழக செய்திகள்

ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தை தொடர்ந்து, ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று வீசி வருவதுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தித்வா புயல் வடதமிழகம் நோக்கி நகருகிறது. 9 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.28) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-வது நாளாக இன்றும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை