கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றுவரும் நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 7-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகவும், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு சென்றுள்ளதால், நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக சட்டசபை தேர்தல் முடிந்ததும், வரும் 8ம் தேதி முதல், மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்தது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி பொது தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன் மாணவர்களுக்கு இரண்டாவது ஆயத்த தேர்வுகளை நடத்தவும், ஆய்வக பயிற்சிக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை