தமிழக செய்திகள்

வீடு புகுந்து தாய்-மகள் மீது தாக்குதல்

கோவில்பட்டியில் வீடு புகுந்து தாய்-மகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தினத்தந்தி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜேஸ் மனைவி மகேஷ்வரி (வயது 39). இவருக்கும் வீட்டின் அருகே குடியிருந்து வரும் வாசுகிசெல்விக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மகேஷ்வரி அவரது தாய் தனலட்சுமியுடன் வீட்டில் இருந்தார். அப்போது வாசுகிசெல்வி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகேஷ்வரியை அவதூறாக பேசி தாக்கியதாகவும், இதை தடுக்க வந்த தனலட்சுமியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகேஷ்வரி அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி செல்வியை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து