தமிழக செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ஊழியருக்கு தீவிர சிகிச்சை

வில்லிவாக்கம் சிக்கோ நகரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய ஊழியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

வில்லிவாக்கம் சிக்கோ நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை திடீரென தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வில்லிவாக்கம், செம்பியம், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் கீர்த்திவாசன் (வயது 34) என்பவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்