தமிழக செய்திகள்

5 கிலோமீட்டர் தூரம் பின்பக்கமாக ஓடி ஓசூர் கல்லூரி மாணவர் சாதனை

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

தினத்தந்தி

திருச்செங்கோடு,

உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,100 மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட மாரத்தான் நடைபெற்றது. 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த பி.சி.ஏ. படிக்கும் கல்லூரி மாணவரான விஜய் என்பவர் 5 கிலோமீட்டர் தூரத்தை பின்பக்கமாக ஓடி கடந்தது பார்வையாளர்களையும், சக போட்டியாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு