தமிழக செய்திகள்

வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருடப்பட்டது.

தினத்தந்தி

விக்கிரவாண்டி தாலுகா வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் மனைவி சிவசக்தி (வயது 25). இவர் நேற்று முன்தினம் காலை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்கு சென்று விட்டார். அவருடைய மாமனார் சாமிநாதன் (60) மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் வேலை முடிந்ததும் சிவசக்தி தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர், கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்