சென்னை,
சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம் பிடித்திருந்தனர்.
இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அவர்கள் இருவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்-அமைச்சருக்கு அவர்கள் இந்திய அணியின் சீருடை, தொப்பியை நினைவுப் பரிசாக வழங்கினர். அவர்களுக்கு முதல்-அமைச்சர், திருவள்ளுவர் சிலையை பரிசாக அளித்தார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினை சந்தித்தது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது,
“என் மீது பொழிந்த அன்பிற்காக நன்றி சார். உங்களின் அதீத ஆற்றலை கண்டு நான் எப்போதும் வியப்படைகிறேன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.என தெரிவித்தார்.