தமிழக செய்திகள்

“சட்டம், ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்” - கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேச்சு

முதல்-அமைச்சர் தலைமையிலான மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு இன்று தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம், ஒழுங்கு விஷயத்தில் ஒருப்போது சமரசம் செய்து கொள்ள மாட்டேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

இன்று தொடங்கி 3 நாட்களில் நடக்கும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். இன்று காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4 முதல் 6.30 மணி வரை போலீஸ் அதிகாரிகளுக்கான கூட்டமும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த விரிவான ஆய்வை முதல்-அமைச்சர் மேற்கொள்ள உள்ளார். வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்