தமிழக செய்திகள்

'தாயின் ஆசியோடு தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவேன்'; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

“தாயின் ஆசியோடு தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தினத்தந்தி

தேனி,

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் நேற்று நடந்த ஒரு விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்ம யுத்தம்

எத்தனையோ உறவுகள் வந்தாலும், உயிர் தந்த உறவான தாய் தான் தெய்வம். அம்மா என்று சொல்லும்போது ஒரு சக்தி வருகிறது. எழுச்சி பிறக்கிறது; நம்பிக்கை பிறக்கிறது; நிம்மதி கிடைக்கிறது.

வேதனை, சோதனைகள் வரும்போது தானாக பிறக்கும் சொல் தான் அம்மா. தாயை நேசிப்பவர்கள், தாயை பூஜிப்பவர்கள் தான் சாதனை படைத்து இருக்கிறார்கள். நானும் தாயை நேசிப்பவன். தாயை பூஜிப்பவன்.

தாய்க்காகத்தான் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளேன். அந்த தாயின் ஆசியோடு இந்த தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

குழப்பமான சூழல்

நிகழ்ச்சி முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளிவந்துள்ளது குறித்தும், அமைச்சர் ஜெயக்குமா ரின் கருத்துகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், தற்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் பேட்டி அளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு காரில் பெரியகுளத்திற்கு புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை