தமிழக செய்திகள்

அதிமுக பெயர், கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக பெயர், கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏல்க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவு குறித்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என உறுதியாகியுள்ளது. அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக. இனிமேல் ஏறுமுகம்தான். இனி வெற்றி மேல் வெற்றிகள் எடப்பாடியாருக்கு குவியும். அதிமுக பெயர், கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதிமுகவின் பெயர், சின்னம், கட்சியை யாரும் உரிமை கோரவோ, பயன்படுத்தவோ முடியாது" என்று கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு