தமிழக செய்திகள்

நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் - எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு

நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் என்று எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளார்.

தினத்தந்தி

செய்யாறு,

மேல்மா சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதை கண்டித்து கருப்பு கொடி காட்டிய விவசாயிகளுக்கு பதிலளிக்கும் வகையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேல்மா கிராமத்தில் புதிய நியாய விலை கடை மற்றும் மேல்நீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அதனை திறந்து வைத்தார். முன்னதாக மேல்மா சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதை கண்டித்து ஜோதி எம்.எல்.ஏ வரும்போது விவசாயிகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளுக்கு பதிலளித்து எம்.எல்.ஏ. ஜோதி பேசுகையில், 3,000 ஏக்கரில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. விவசாயி என்ற போர்வையில் சிலர் போராட்டம் நடத்துகின்றனர்.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெரும் இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலருடைய விவசாய நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும். அதற்காக நல்ல திட்டங்களை கைவிட முடியுமா? என்று பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்