தமிழக செய்திகள்

“5 வருடங்கள் ஒழுங்காக படித்தால் ராஜா போல வாழலாம்” - மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை

பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை உள்ளே செல்லுமாறு இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அறிவுறுத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், பேருந்தை நிறுத்தி படியில் தொங்கிய மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பிளஸ் 2 இரண்டு வருடம், கல்லூரி 3 வருடம் என 5 வருடங்கள் ஒழுங்காக படித்தால் ராஜா போல வாழலாம், இல்லாவிட்டால் 50 வருடங்களுக்கு அம்போனுதான் போகனும் என்று அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

இதைத்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களை நிறுத்திய அவர், அவர்கள் அணிந்திருந்த கடுக்கணை கழற்ற வைத்து, தலை முடியை சீராக வெட்டுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து