தமிழக செய்திகள்

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை நட்ட பொதுமக்கள்

மேக்காமண்டபம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை நட்ட பொதுமக்கள்

தினத்தந்தி

தக்கலை, 

அழகிய மண்டபத்தில் இருந்து திருவட்டார் பகுதிக்கு செல்லும் சாலையில் கடமலைகுன்றிலிருந்து மேக்காமண்டபம் சந்திப்பு வரை சாலையின் ஒரு பகுதி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் சற்று சிரமத்தோடு செல்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் குழிகளில் வாழை மற்றும் செடிகளை நட்டுவைத்து உள்ளனர். இதை பார்த்த பிறகாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்