தமிழக செய்திகள்

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

கம்பம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்

தினத்தந்தி

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 40). இவரது தந்தை பெனிக்ஸ் (60). இவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து காரில் பத்தனம் திட்டாவுக்கு வந்து கொண்டிருந்தனர். காரை நிஷாந்த் ஓட்டினர். தேனி மாவட்டம் கம்பம் புறவழிச்சாலையில் காட்டு பள்ளிவாசல் சந்திப்பில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையார பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நிஷாந்த், பெனிக்ஸ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு